Publish Date: Wed, 18 Oct 2017 (13:39 IST)
Updated Date: Wed, 18 Oct 2017 (13:41 IST)
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு பாஜக மட்டும் காரணமல்ல இதில் காங்கிரஸ் கட்சியின் பங்கும் உள்ளதாக மோடி கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் பாஜக மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதன் விளைவாக கேரளா மற்றும் பஞ்சாப் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மரண அடி கிடைத்தது.
அடுத்து குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மோடிக்கு இது அக்னி பரீட்சையாக உள்ளது. குஜராத்தின் சூரத்தில்தான் ஜிஎஸ்டிக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்கவைப்பது கடினம் என்று மோடி சற்று உணர்ந்துள்ளார்.
இதனால் மோடி, நாட்டையே முடக்கிப் போட்டிருக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு பாஜக மட்டுமே காரணமல்ல, காங்கிரஸுக்கும் சம பங்கு இருக்கிறது. அதோடு 30-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது என கூறியுள்ளார்.