Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பிரச்சாரம் செய்யாத குஷ்பு.. தெலுங்கானாவில் மட்டும் பிரச்சாரம் ஏன்?

Siva
ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (11:47 IST)
தமிழகத்தில் சில நாட்கள் மட்டும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை குஷ்பூ அதன் பின்னர் உடல்நிலை காரணமாக பிரச்சாரம் செய்யவில்லை என்றும் இருப்பினும் சமூக வலைதளங்கள் மூலம் வாக்கு திரட்டுவேன் என்றும் கூறியிருந்தார்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு குஷ்பு தற்போது பிரச்சாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகை குஷ்பூ பல பகுதிகளில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழகத்தில் உடல்நிலையை காரணம் காட்டி பிரச்சாரம் செய்யாத குஷ்பூ தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன் என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள முக்கிய தொகுதியில் போட்டியிட குஷ்பூ விண்ணப்பம் செய்திருந்ததாகவும் ஆனால் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் ஏற்பட்ட வருத்தத்தில் தான் அவர் பிரச்சாரம் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments