Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம்.. திடீரென அறிவிப்பு வெளியிட்ட நடிகர் சுரேஷ் கோபி..!

Siva
திங்கள், 10 ஜூன் 2024 (11:30 IST)
மூன்றாவது முறையாக பிரதமராக நேற்று நரேந்திர மோடி பதவியேற்று கொண்ட நிலையில் அவருடன் 70க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டார்கள் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் கேரளாவின் முதல் பாஜக எம்பி என்ற பெருமையை பெற்ற நடிகர் சுரேஷ் கோபி அவர்களும் இணை அமைச்சராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் அவருக்கு ஒரு முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென அவர் தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என்றும் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன் என்றும் அமைச்சர் பதவி வேண்டாம் என தலைமையிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன் என்றும் விரைவில் என்னை விடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்

ஒருவேளை இணை அமைச்சர் பதவி தந்தது அவருக்கு அதிருப்தியாக இருக்குமோ? அவர் கேபினட் அமைச்சர் பதவியை எதிர்பாத்தாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments