Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் ஹிட்லரின் ஆட்சி!- பிரகாஷ்ராஜ் வெளியிட்ட ஃபோட்டோ!

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (17:48 IST)
இந்தியாவில் ஹிட்லரை போன்றதொரு சர்வதிகார ஆட்சி நடைபெறுவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் சூசகமாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் எதிர் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் நாட்டில் நிலவும் சூழல் குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் இடம் பெற்றுள்ள புகைப்படத்தில் பாஜகவின் தாமரை சின்னத்தை கவிழ்த்து வைத்தது போல ஹிட்லரின் மீசை உள்ளது. அந்த படத்தை பதிவிட்டுள்ள பிரகாஷ்ராஜ் இந்தியாவிலும் சர்வாதிகார ஆட்சி தலையெடுக்கும் முன் அதை அகற்ற வேண்டியது அவசியம் என்ற ரீதியில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வரும் பிரகாஷ் ராஜ் தனது நண்பரும் எழுத்தாளருமான கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு தொடர்ந்து ட்விட்டர் மூலம் மக்களுடன் அரசியல் விவாதத்தில் ஈடுபட்டதும், பெங்களூரில் மக்களவை தேர்தலின் போது சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments