Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் வக்கீல் சரமாரியாக குத்திக் கொலை

Webdunia
வியாழன், 31 மே 2018 (15:40 IST)
சித்தூர் அருகே பெண் வக்கீல் ஒருவர் சரமாரியாக குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை சேர்ந்தவர் நாகஜோதி. இவரது கணவர் ஜிதேந்திரா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் வக்கீலாக பணியாற்றி வந்தனர்.
 
கணவன் - மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நாகஜோதி கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார்.
 
சம்பவ தினத்தன்று நாகஜோதி, இரு சக்கரத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த மர்ம நபர்கள்,  நாகஜோதியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். இதல் ரத்த வெள்ளத்தில் சரிந்த நாகஜோதி சம்பவ இடத்திலே பலியானார்.
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், நாகஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பெண் வக்கீல் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments