Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுக்கு தெரியாம முதல்வரை பாக்க வந்த மாணவன்! – காரணத்தை கேட்டு அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (11:37 IST)
கேரளாவில் வீட்டுக்கு தெரியாமல் பள்ளி மாணவன் கேரள முதல்வரை சந்திக்க சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குற்றியாடி வேளம் பகுதியை சேர்ந்த ராஜீவ் என்பவரது மகன் தேவானந்த். 16 வயதான தேவானந்த் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டு முன்பு ஆட்டோவில் வந்திறங்கிய தேவானந்த் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் முதல்வரை பார்க்க வேண்டுமென கேட்டுள்ளார்.

ALSO READ: உலகின் மிக ரகசியமான அமெரிக்க உளவுத் துறை அருங்காட்சியகத்தில் என்ன உள்ளது?

அந்த சிறுவனை விசாரித்த போலீஸார் சிறுவனை ம்யூசியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததுடன், சிறுவனின் பெற்றோர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதற்குள்ளாக பள்ளி மாணவன் ஒருவன் தன்னை தேடி வந்ததை அறிந்த முதல்வர் பினராயி விஜயன் அந்த சிறுவனை தன்னிடம் அழைத்து வரும்படி சொல்லியுள்ளார்.

பின்னர் மாணவரும், அவரது பெற்றோரும் முதல்வரை சந்தித்தனர். அப்போது சிறுவன் தனது தந்தை ஒரு இடத்தில் கடன் வாங்கி இருந்ததாகவும், அவர்கள் தவணை கட்டாததால் வந்து மிரட்டுவதால் குடும்பம் சோகத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறிய முதல்வர், பெற்றோருக்கு தெரியாமல் இப்படி வரக்கூடாது என சிறுவனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments