Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் வன்முறை: கண்டனம் தெரிவிக்காத தமிழக கட்சிகள்!

கேரளாவில் நேற்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பினர் நடத்திய பந்த் வன்முறையில் முடிந்தது என்பதும் இந்த வன்முறையை அடுத்து கேரள நீதிமன்றம் தானே முன்வந்து வழக்கு பதிவு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
, சனி, 24 செப்டம்பர் 2022 (10:53 IST)
கேரளாவில் நேற்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பினர் நடத்திய பந்த் வன்முறையில் முடிந்தது என்பதும் இந்த வன்முறையை அடுத்து கேரள நீதிமன்றம் தானே முன்வந்து வழக்கு பதிவு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
கேரளாவில் ஆட்சி செய்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு இதுகுறித்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் தெரிந்ததே. ஆனால் தமிழகத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட எந்த ஒரு கட்சியும் கேரளாவில் நடந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதே வன்முறை பாஜக மற்றும் இந்து அமைப்புகளால் நடந்திருந்தால் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் கண்டனம் கொடுத்திருப்பார்கள் என்றும் ஆனால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு வன்முறையில் இறங்கியதை எந்த கட்சியும் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரயில்களை கண்காணிக்க இஸ்ரோ உதவியுடன் புதிய தொழில்நுட்பம்!