Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.. மீட்பு பணி தீவிரம்

Arun Prasath
ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (15:59 IST)
கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் படகில் இருந்த 60 பேரும் நீருக்குள் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திரா மாநிலம் தேவிப்பட்டினம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் படகில் இருந்த 60 பேரும் ஆற்றில் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.  சுற்றுலா பயணிகளை கண்டி பொச்சம்மா கோவிலிலிருந்து, பாபிகொண்டலு என்ற இடத்திற்கு படகில் அழைத்துச் செல்லும் வழியில் கவிழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனுமதிக்கப்பட்ட ஆட்களை விடவும் அதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்றதே படகு கவிழ்ந்ததற்கான காரணம் என கூறப்படுகிறது. மேலும் சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் கோதாவரி ஆற்றில் நீர் அதிகமாக இருந்ததும் காரணம் எனவும் கூறப்படுகிறது. சம்பவத்தை அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த மீட்பு படையினர் 10 பேரை மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மீட்பு குழுவினர் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments