Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிகிச்சை அளிக்காததால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு..

Arun Prasath
ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (15:21 IST)
மதுரையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் உயிரிந்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பணியான சக்திகாளி என்பவர், புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். அப்போது திடீரென கர்ப்பிணியின் உடல்நிலை மோசமானது. அதன் பிறகு உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து சக்திகாளியின் கணவர் மணிமுத்து, ”மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் இரவு பணியில் மருத்துவர் இல்லாத நிலையில் பணியில் இருந்த செவிலியர்கள் தாக்கியதன் காரணமாக கர்ப்பிணி உயிரிழந்ததாகவும், கர்ப்பிணிக்கு இரத்தப்போக்கு ஏற்பட்ட பிறகும், வேறு மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்காதது  தான் கர்ப்பிணி இறந்ததற்கான காரணம்” எனவும் புகார் அளித்துள்ளார். அப்புகாரை தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments