Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிர்சாதன பெட்டி வெடித்துச் சிதறியதில் மாணவி பலி!

Webdunia
சனி, 29 டிசம்பர் 2018 (12:10 IST)
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி என்ற பகுதியில் வசித்து வந்தார் தீபிகா. அங்குள்ள ஒரு கல்லூரியில் இவர் பிடெக் முதலாமாண்டு படித்து வந்தார். தீபிகாவின் உறவினர் திருமணத்திற்கு வீட்டில் இருந்து அனைவரும் சென்று விட்டனர் ஆனால் தீபிகாவிற்கு செமஸ்டர் தேர்வுகள் இருந்ததால் அவரால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த தீபிகாவுக்கு தாகம் எடுக்கவே குளிர்சாதன பெட்டியை திறந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக குளிர்சாதனப் பெட்டி வெடித்துச் சிதறியது.
 
இதனையடுத்து வீடு முழுவதும் கரும் புகைசூழ்ந்திருந்தது.’ வெடிக்கும்’ சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தீபிகாவின் வீட்டை பார்த்த போது வீட்டில் இருந்து புகை வந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 
 
சில நிமிடங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் தீபிகா வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்றனர். ஆனால் புகையுடன் தீபிகா சடலமாக கிடந்துள்ளார்.
 
இதனியடுத்து தீபிகாவின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார்  அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், குளிர்சாதனப் பெட்டி வெடித்ததற்கான காரணம் பற்றி போலீஸார் தீவிர விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments