Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூங்கி கொண்டிருந்த குழந்தையை கடத்த முயன்ற நபர்..சிசிடிவி காட்சிகள்

Arun Prasath
புதன், 18 செப்டம்பர் 2019 (12:34 IST)
வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்த குழந்தையை ஒரு மர்ம நபர் கடத்த முயன்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், லூதியானா நகரின், ரிஷி நகர் பகுதியில் ஒரு வீட்டிற்கு வெளியே ஒரு குடும்பத்தினர் 4 வயது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே டிரை சைக்கிளில் வந்த ஒரு மர்ம நபர், தூங்கி கொண்டிருந்த குழந்தையை கடத்தி செல்ல முயன்றார். ஏதோ சத்தம் கேட்கிறதே என விழித்த அக்குழந்தையின் தாய், தன் குழந்தையை ஒரு நபர் கடத்த முயன்றதை கண்டவுடன் கூச்சலிட்டார். உடனே அந்த நபரிடமிருந்து குழந்தையை மீட்டார்.

தாய் கூச்சலிட்டதை கண்டு விழித்த குடும்பத்தினர், அந்நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த குழந்தையை கடத்த முயன்ற நபர் தப்பி ஓடினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் அந்த நபரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments