Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கு பார்த்தாலும் இரட்டை: கேரளாவில் ஒரு அதிசய கிராமம்

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (05:01 IST)
கேரளாவில் உள்ள கொடின்ஹி என்ற சிறிய கிராமம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த கிராமத்தின் மொத்த ஜனத்தொகையே சுமார் 2000 குடும்பங்கள் என்று இருக்கும் நிலையில் இங்கு சுமார் 400 இரட்டையர்கள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

கடந்த 2008ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 280 இரட்டையர்கள் இருந்த நிலையில் கடந்த பத்து ஆண்டுகளில் இரட்டையர்கள் எண்ணிக்கை 400ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் சராசரியாக வருடம் ஒன்றுக்கு 1000 இரட்டை குழந்தைகள் தான் பிறக்கின்றன. அவற்றில் 45 பேர் இந்த கிராமத்தில் பிறக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கிராமத்தில் மட்டும் எப்படி அதிகளவில் இரட்டைக்குழந்தைகள் அதிகம் பிறக்கின்றன என்பது குறித்த ஆய்வு நடந்து வருகிறது. இந்த ஆய்வில் வெளிநாட்டினர்களும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை இந்த ஆச்சரியத்திற்கு  விடை கிடைக்கவில்லை. வியட்நாம், கனடா, நைஜீரியா, பிரேசில் போன்ற நாடுகளில் உள்ள ஆய்வாளர்கள் இங்கு வருகை தந்து இரட்டையர்களின் டி.என்.ஏக்களை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments