Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புடவை கட்ட மறுத்த மனைவி: விவாகரத்து கோரிய கணவர்

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (08:08 IST)
புனேவில் நபர் ஒருவரின் மனைவி மாடர்ன் டிரஸ் தான் அணிய முடியும் புடவையெல்லாம் கட்ட முடியாது என கூறியதால் அவரது கணவர் விவாகரத்து கோரியுள்ளார்.
இன்றைய நவீன காலக்கட்டத்தில் பெண்கள் பலர் மாடர்ன் டிரஸ்ஸை அணிவதை விரும்புகின்றனர். அப்படி புனேவில் நபர் ஒருவரின் மனைவி வீட்டில் மாடர்ன் டிரஸ் அணிந்துள்ளார்.
 
இதனால் கடுப்பான அந்த நபர் தனது மனைவியை புடவை மட்டும் தான் அணிய வேண்டும், மாடர்ன் டிரஸ் எல்லாம் போடக் கூடாது என கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அந்த பெண் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
 
இந்நிலையில் அந்த நபர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கு சில தினங்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது தனது குழந்தையுடன் அந்த பெண் நீதிமன்றத்திற்கு வந்தார். நீண்ட நாள் கழித்து மனைவி குழந்தையை பார்த்த அந்த நபர் மனம் திருந்தி, தனது மனைவியுடன் சேர்ந்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments