Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் தரிசனம் செய்ய வந்த தமிழர் மரணம்..

Arun Prasath
வெள்ளி, 17 ஜனவரி 2020 (16:52 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரிசையில் நின்ற தமிழக பக்தர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல லட்சம் பக்தர்கள் அனுதினமும் தரிசனம் செய்ய வருகை புரிகிறார்கள். இந்நிலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் சென்றுக்கொண்டிருந்த போது, வரிசையில் நின்ற 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் தீடீரென மார்பை பிடித்து கீழே விழுந்தார்.

உடனடியாக அவரை தேவஸ்தான அதிகாரிகள் மீட்டு திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

பின்பு அவரது சட்டை பையை போலீஸார் சோதனை செய்ததில் வேலூரில் இருந்து திருப்பதிக்கு வந்ததற்கான பஸ் டிக்கெட் இருந்துள்ளது.  இந்நிலையில் இறந்தவர் வேலூரை சேர்ந்தவரா அல்லது அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments