Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாக்கடைக்குள் கிடந்த முதலை – பரபரப்பு வீடியோ

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (14:49 IST)
மஹாராஷ்டிராவில் சாக்கடைக்குள் முதலை ஒன்று கிடந்ததை பார்த்து மக்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக மஹாராஷ்டிராவின் பல பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. பல பகுதிகள் வெள்ளக்காடாய் மாறின. ரத்னகிரி பகுதியிலும் வெள்ளநீர் சூழ்ந்திருந்தது. தற்போது நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பியிருக்கிறது.

இந்நிலையில் அங்குள்ள சிப்லானில் மக்கள் நடமாடும் பகுதி அருகே உள்ள சாக்கடை கால்வாயில் 8 அடி நீள முதலை ஒன்று உயிருடன் கிடந்துள்ளது. இதை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் முதலையை பத்திரமாக கால்வாயிலிருந்து மீட்டார்கள்.

வெள்ளம் ஏற்பட்டபோது அருகே இருக்கும் வஷித்ரி நதியிலிருந்து இந்த முதலை இந்த பகுதிக்குள் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது இந்த முதலை ஆற்றில் விடப்பட்டு விட்டது. ஆனாலும் இது கால்வாயினுள் கிடந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments