Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வயது சிறுமியை சீரழித்த 11 வயது சிறுவன்: உபி யில் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2018 (08:32 IST)
உத்திரபிரதேசத்தில் 11 வயது சிறுவன் ஒருவன் 5 வயது சிறுமியை சீரழிக்க முயன்ற சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்திரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக அரங்கேறி வருகிறது.
 
உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் 11 வயது சிறுவன், 5 வயது சிறுமியிடம் சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி அவளை மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்றுள்ளான். பின்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
 
சிறுமியின் அலறல் சத்தம் கேட்கவே அங்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 11 வயது சிறுவன் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்