Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஜா புயல் எதிரொலி: அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2018 (08:30 IST)
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி அதற்கு 'கஜா; என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்தா புயல் கடலூர் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா ஆகிய பகுதிகளுக்கு இடையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே கஜா புயல் குறித்து அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பலதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த புயலால் சென்னையிலும் பாதிப்பு ஏற்படும் என்பதால் சென்னை உள்பட புயல் தாக்கும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை நடத்தப்படுகிறது.

சென்னைக்கு கிழக்கே 930 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயல் இன்னும்  2 அல்லது 3 நாட்களில் தமிழக கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இந்த புயல், வர்தா புயல் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், மக்கள் தேவையில்லாமல் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments