Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோயாளியின் வயிற்றில் 639 ஆணிகள்; காந்தம் மூலம் வெளியே எடுத்த மருத்துவர்கள்

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (14:20 IST)
கொல்கத்தாவில் நோயாளி ஒருவரின் வயிற்றில் இருந்த 639 ஆணிகளை மருத்துவர்கள் காந்தத்தின் உதவியோடு வெளியே எடுத்தனர்.


 

 
கொல்கத்தாவின் பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள கோபர்டங்கா பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஸ்கைசோபிரீனியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் அவர் பல நாட்களாக ஆணி மற்றும் மண் ஆகியவற்றை உண்டு வந்துள்ளார். திடீரென வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
கொல்கத்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அவருக்கு எண்டோஸ்கோபி சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அவர் வயிற்றில் 2 முதல் 2.5 இன்ச் அளவுள்ள ஆணிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 
 
அறுவை சிகிச்சையில் வயிற்றில் இருந்த ஆணிகளை காந்தம் உதவியுடன் வெளியே எடுத்துள்ளனர். நோயாளி உடல்நலனை தற்போது மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments