Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கனமழை ; பஞ்சாங்கம் சொல்வது என்ன?

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (14:04 IST)
மார்கழி அதாவது வருகிற டிசம்பர் மாதம் புயல் ஏற்பட்டு அதிக சேதம் ஏற்படும் என பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.


 

 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.அதிலும், கடந்த இரு நாட்களாக சென்னை உள்ளிட்ட  8 கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 
 
 2015ம் ஆண்டு மழையில் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது குறித்தும், வர்தா பயல் குறித்தும் பஞ்சாங்கத்தில் ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், மழை குறித்து பஞ்சாங்கத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.


 

 
ஆனால், பஞ்சாங்கத்தில் மார்கழி மாதம் புயல் ஏற்பட்டு சேதாரம் அதிகமாக வாய்ப்புண்டு என கூறப்பட்டுள்ளது. எனவே, வருகிற டிசம்பர் மாதம் சென்னை, மீண்டும் ஒரு பெரு மழையை சந்திக்கும் என சிலர் நம்புகின்றனர். தற்போது பெய்து வரும் மழை பற்றி எந்த குறிப்பும் பஞ்சாங்கத்தில் இல்லை என்பதால் அவர்கள் நிம்மதி பெருமூச்சி விட்டுள்ளனர்.
 
மேலும், டிசம்பர் மாதம் புயல் ஏற்பட்டாலும், வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என சில ஜோதிடர்கள் கூறி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments