Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவல் நிலையத்தில் மது அருந்திவிட்டு நடனம்: 5 காவலர்கள் பணிநீக்கம்..!

dismissed
, வெள்ளி, 10 மார்ச் 2023 (18:19 IST)
காவல் நிலையத்தில் மது அருந்திவிட்டு நடனமாடிய ஐந்து காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஜார்கண்ட் மாநிலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடிய போது காவல் நிலையத்தில் ஐந்து காவலர்கள் மது அருந்திவிட்டு நடனமாடியதாக தெரிகிறது. அதுமட்டும் இன்ற்இது குறித்த வீடியோவையும் அவர்கள் இணையத்தில் பதிவு செய்தனர். 
 
காவலர்கள் காவல் நிலையத்திலேயே மது அருந்திவிட்டு நடமாடிய வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் மது அருந்திவிட்டு நடனமாடியதை ஐந்து காவலர்கள் ஒப்புக்கொண்டனர். 
 
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட ஐந்து காவலர்களையும் பணி நீக்கம் செய்ய மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வருத்தம் தெரிவிக்காவிட்டால் நடவடிக்கை: அறப்போர் இயக்கத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை..!