Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிஞ்சிலே பழுத்த சிறுவர்கள்: 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்!

பிஞ்சிலே பழுத்த சிறுவர்கள்: 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2016 (11:44 IST)
புனேவில் 6 வயது சிறுமி ஒருவரை 10 முதல் 14 வயதுடைய 4 சிறுவர்கள் கூட்டு பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குற்றச்செயலில் ஈடுபட்ட சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 
 
புனேவின் அன்னா சாஹேப் மகர் சேரிப்பகுதியில் ஒரு வயது சிறுமி ஒருவர் சக சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த சிறுவர்களில் 4 பேர் குறிப்பிட்ட அந்த சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர்.
 
சிறுவர்கள் 4 பேரும் 10 முதல் 14 வயதுடையவர்கள். இவர்கள் மறைவான இடத்திற்கு சிறுமியை அழைத்துக்கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் நான்கு பேரும் அந்த இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.
 
நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் கூறியதை அடுத்து இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள பிம்ப்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
சிறுமியை பலாத்காரம் செய்த குற்றச்செயலில் ஈடுபட்ட 4 சிறுவர்களையும் கைது செய்து காவல்துறை அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். குற்றவாளிகள் 14 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் என்பதால் அவர்களை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்க அனுப்ப உள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்