Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்: கைது செய்த போலீஸ்

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (08:30 IST)
புல்வாமா தாக்குதலை கொண்டாடும் விதமாக போட்டோ வெளியிட்ட 4 மாணவிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது நடத்திய தாக்குதலில் 44 வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்த துயர சம்பவம் தேசத்தையே உலுக்கியுள்ளது.  இதற்கு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என நாடெங்கிலும் இருந்து கண்டனக்குரல்கள் எழுந்து வருகிறது.
 
இந்நிலையில் ராஜஸ்தானில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தல்வீன் மன்சூர், ஜோகிரா நசீர், உஸ்மா நசீர், இக்ரா ஆகிய 4 மாணவிகள் புல்வாமா தாக்குதலை கொண்டாடும் விதமாக இணையத்தில் போட்டோ பதிவிட்டனர். 
 
இதனையறிந்த கல்லூரி நிர்வாகம் உடனடியாக அந்த 4 மாணவிகளை இடைநீக்கம் செய்தது. மேலும் இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். போலீஸார் அந்த 4 மாணவிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோக்களுக்கு அரசு செயலி அமைக்கப்படும்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

Go back Governor கோஷமிட்ட எம்.எல்.ஏ.க்கள்: உபி சட்டமன்றத்தில் பரபரப்பு..!

ஓபிஎஸ் ஒரு கொசு.. அவரை பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை: ஜெயகுமார்

இரு மகன்களுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்.. செல்போனில் பேசியதால் விபரீதம்..!

மலக்குடல் பாக்டீரியாக்கள் மிதக்கும் கும்பமேளா தண்ணீர்!?? குளிக்க தகுதியற்றது..! - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments