Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புல்வாமா தாக்குதலை கொண்டாடிய 4 இந்திய மாணவிகள்: கைது செய்த போலீஸ்

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (08:30 IST)
புல்வாமா தாக்குதலை கொண்டாடும் விதமாக போட்டோ வெளியிட்ட 4 மாணவிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது நடத்திய தாக்குதலில் 44 வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்த துயர சம்பவம் தேசத்தையே உலுக்கியுள்ளது.  இதற்கு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என நாடெங்கிலும் இருந்து கண்டனக்குரல்கள் எழுந்து வருகிறது.
 
இந்நிலையில் ராஜஸ்தானில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தல்வீன் மன்சூர், ஜோகிரா நசீர், உஸ்மா நசீர், இக்ரா ஆகிய 4 மாணவிகள் புல்வாமா தாக்குதலை கொண்டாடும் விதமாக இணையத்தில் போட்டோ பதிவிட்டனர். 
 
இதனையறிந்த கல்லூரி நிர்வாகம் உடனடியாக அந்த 4 மாணவிகளை இடைநீக்கம் செய்தது. மேலும் இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். போலீஸார் அந்த 4 மாணவிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments