Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னத்தம்பி போல் கிரண்பேடியையும் மாற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (07:11 IST)
பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்த சின்னத்தம்பி யானையை முகாமில் அடைத்தது போல் மக்களின் திட்டங்களை நிறைவேற்ற தடையாக இருக்கும் புதுவை ஆளுனர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

புதுவையில் ஆளுனர் கிரண்பேடி, முதல் நாராயணசாமி இடையேயான பனிப்போர் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. ஆளுனருக்கு எதிராக முதல்வர் நடத்தி வரும் தொடர் தர்ணா போராட்டம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழக தலைவர்கள் பலர் முதல்வர் நாராயணசாமியின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் புதுவை முதல்வர் நாராயணசாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்த சின்னத்தம்பி யானையை முகாமில் அடைத்தது போல் மக்களுக்கான திட்டங்களுக்கு எதிராக முட்டுக்கட்டையாக இருக்கும் புதுவை ஆளுனர் கிரண்பேடியை பணிமாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும் புதுச்சேரி மாநிலத்தையே திஹார் சிறையாக மாற்றி வருகிறார் எனவும் ஸ்டாலின் விமர்சித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments