சபரிமலையில் 30 நாளில் 19.38 லட்சம் பக்தர்கள் தரிசனம்!!

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (08:51 IST)
கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் சபரிமலையில் கோயிலில் 30 நாட்களில் 19.38 லட்சம் பக்தர்கள் தரிசனம்.


சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைகளுக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அலைமோதுகிறது. கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து, இருமுடி கட்டி பலரும் வந்து செல்கின்றனர்.

பல நடவடிக்கைகள் எடுத்தும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தினசரி பக்தர்களின் எண்ணிக்கையை 90,000 ஆக குறைக்கவும் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முதல் பாதியில் அதிகாலை 3 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், இரண்டாவது பாதியில் மாலை 3 மணி முதல் இரவு 11.30 மணி வரையிலும் தரிசன நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. இருப்பினும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் குழந்தைகள் முதியவர்களுக்கு சிறப்பு லைன் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் சபரிமலையில் கோயிலில் 30 நாட்களில் 19.38 லட்சம் பக்தர்கள் வந்த ஐயப்பனை தரித்துள்ளனர். சுமார் 21.71 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர் என்பது கூடுதல் தகவல்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments