Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸார் தடியடி: உத்தர பிரதேசத்தில் 11 பேர் பரிதாப பலி!

Webdunia
சனி, 21 டிசம்பர் 2019 (11:18 IST)
உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்ததில் 11 பேர் பலியாகியுள்ளனர். 
 
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தின் கண்டாநகர், கோரக்பூர், ஷமாரூஃப், இஸ்மெயில் பூர் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
கோரக்பூரில் நடந்த போராட்டத்தை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றபோது, மோதல் ஏற்பட்டது. போலீஸாரை நோக்கி கற்கள் வீசப்பட்டன. வாகனங்கள் நொறுக்கப்பட்டன. பின்பு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.
 
மேலும் மாநிலத்தின் பல பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் 6 பேர் உயிரிழ்ந்துள்ளதாக முன்னர் கூறப்பட்டது. ஆனால் இப்போது வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6-ல் இருந்து 11ஆக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments