Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (19:07 IST)
தமிழகத்தில் நாள்தோறு சுமார் 7000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இன்று கூட தமிழகத்தில் 6426 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதையும் பார்த்தோம் .இந்த நிலையில் தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10,093 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
தென்னிந்தியாவின் முதல் முறையாகவும் இந்தியாவில் இரண்டாவது மாநிலமாகவும் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 10,093 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,20,390 ஆக உயர்ந்துள்ளது
 
மேலும் ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 65 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1213ஆக உயர்ந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு என்ற தகவல் ஆந்திர அரசை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments