Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது நாளாக பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva
செவ்வாய், 16 ஜூலை 2024 (10:46 IST)
பங்குச்சந்தை நேற்று வாரத்தின் முதல் நாளில் உயர்ந்த நிலையில் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்றத்தில் உள்ளது என்பதும் சற்றுமுன் 203 புள்ளிகள் அதிகரித்து 80 ஆயிரத்து 878 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதே போல் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 65 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 655 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளது. அதேபோல் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த தியாகி யார்? அதிமுக எம்.எல்.ஏக்களின் பேட்ஜ்.. என்ன அர்த்தம்?

2 ஆண்டுகளில் 7 மாநில சட்டமன்ற தேர்தல்: வக்பு சட்ட திருத்த மசோதா பாஜக.வுக்கு பாதகமா? சாதகமா?

இது நமக்கு கட்டுப்படியாகாது.. அமெரிக்க ஏற்றுமதியை நிறுத்திய லேண்ட் ரோவர்! - அடுத்து டாட்டா காட்டப்போகும் TATA!

இலங்கை சென்ற பிரதமர் மீனவர் பிரச்சனைக்கு எந்த தீர்வும் காணவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

வாணியம்பாடி பள்ளி காவலாளி ஓட ஓட குத்தி கொலை.. விடுமுறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments