Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை அபாரம்.. மீண்டும் 80000 தாண்டிய சென்செக்ஸ்..!

share

Siva

, வெள்ளி, 12 ஜூலை 2024 (09:22 IST)
பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக சிறிய அளவில் சரிவில் இருந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இன்று மீண்டும் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை தாண்டி உள்ளதும் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பங்குச்சந்தை வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 90 புள்ளிகள் அதிகரித்து 80 ஆயிரம் என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 70 புள்ளிகள் அதிகரித்து 24 ஆயிரத்து 385 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் பஜாஜ் பைனான்ஸ், எச்.சி.எல் டெக்னாலஜி, பாரத ஸ்டேட் வங்கி, டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் அதிகரித்துள்ளதாகவும், ஆசியன் பெயிண்ட், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, இந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி ஆகிய பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம் கண்டிருப்பதும் மீண்டும் 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் புதிதாக முதலீடு செய்பவர்கள் மிகவும் கவனத்துடன் தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஸ்போர்ட் எடுக்கும் பொதுமக்களுக்கு உதவ புதிய வசதி.. இடைத்தரகரிடம் ஏமாற வேண்டாம்..!