வாரத்தின் முதல் நாளே அமோகம்.. 1100 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்த சென்செக்ஸ்..!

Siva
திங்கள், 25 நவம்பர் 2024 (09:56 IST)
கடந்த வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து மிகப்பெரிய நஷ்டம் ஈடு கட்டப்பட்ட நிலையில், இன்று மீண்டும் 1100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதானி  மீது அமெரிக்கா அரசு சுமத்திய குற்றச்சாட்டு காரணமாக பங்குச்சந்தை மிக மோசமாக கடந்த வாரம் சரிந்த நிலையில், அதையெல்லாம் ஈடுகட்டும் வகையில் வெள்ளிக்கிழமையும் இன்றும் பங்குச்சந்தை மிக வேகமாக உயர்ந்து வருகிறது.

சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், 1120 புள்ளிகளை உயர்ந்து 80,227 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 360 புள்ளிகள் உயர்ந்து 24,207 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில், ஹெச்.சி.எல். டெக்னாலஜி, இன்ஃபோசிஸ், எல் அண்ட் டி உள்பட சில பங்குகள் மட்டுமே குறைந்துள்ளதாகவும், மற்ற அனைத்து பங்குகளும் மிக அதிகமாக உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments