Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரம் முழுவதும் நெகட்டிவ்.. இன்றும் பங்குச்சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அச்சம்..!

Siva
வெள்ளி, 20 டிசம்பர் 2024 (09:29 IST)
இந்த வாரத்தில் நான்கு நாட்களுமே பங்குச்சந்தை சரிவில் இருந்த நிலையில், இன்று ஐந்தாவது நாளாகவும் பங்குச்சந்தை சரிந்து உள்ளது. எனவே, இந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தை சரிந்து பெரும் நஷ்டத்தை உண்டாக்கிய நிலையில், முதலீட்டாளர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த நான்கு நாட்களாக இந்திய பங்குச்சந்தை சரிந்து வரும் நிலையில், இன்றும் மும்பை பங்குச்சந்தை 150 புள்ளிகள் சரிந்து 79,061 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை 27 புள்ளிகள் சரிந்து 23,926 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், இன்போசிஸ், கோடக் மகேந்திரா வங்கி, டாட்டா மோட்டார்ஸ், டிசிஎஸ், மற்றும் டைட்டான் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில், டாட்டா ஸ்டீல், சன் பார்மா, ஸ்டேட் வங்கி, இண்டஸ் இன்ட் வங்கி, இந்துஸ்தான் லீவர், எச்டிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பெடரல் வங்கியின் வட்டி விகிதம் மாற்றம் காரணமாகவே உலகம் முழுவதும் பங்குச்சந்தை சரிந்து வருவதாக கூறப்படுகிறது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments