Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது நாளாக பங்குச்சந்தையில் ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (09:36 IST)
நேற்று வாரத்தின் முதல் நாளான பங்குச்சந்தை ஏற்றம் கொண்ட நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக அதானி விவகாரம் பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் நேற்று ஓரளவுக்கு பங்குச்சந்தை உயர்ந்த நிலையில் இன்று சென்செக்ஸ் 270 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்து 115 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை 83 புள்ளிகள் உயர்ந்து 17,717 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
இந்த வாரத்தின் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக பங்கு சந்தை உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தாலும் வரும் நாட்களில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் எனவே புதிதாக முதலீடு செய்பவர்கள் முதலீட்டு ஆலோசர்கள் அறிவுரையை பெற்று முதலீடு செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது..
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments