சரிவில் முடிந்த சென்செக்ஸ்!

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (16:38 IST)
கடந்த சில நாட்களாக இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்றும் நேற்றை போல சற்று சரிந்துள்ளது. 
 
நேற்று காலை பங்கு சந்தை தொடங்கியவுடன் சென்செக்ஸ் 120 புள்ளிகள் வரை சரிந்து 60132 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 40 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 900 என்ற புள்ளிகள் வர்த்தகமானது. 
 
பங்கு சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிப்டி சரிவில் இருந்தாலும் மிக குறைந்த அளவில் தான் சரிந்து இருப்பதால் மாலைக்குள் மீண்டும் ஏற்றம் காண வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். 
 
ஆனால் இன்று தொடக்கத்திலிருந்தே சரிவுடன் இருந்த இந்திய பங்குச்சந்தை குறியீட்டெண்கள் வர்த்தகம் முடிவில் தலா 1% வீழ்ச்சியடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 652 புள்ளிகள் சரிந்து 59,646 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 198 புள்ளிகள் குறைந்து, 17,758 புள்ளிகளில் வணிகமாகி நிறைவடைந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் தலைகீழாக குறைந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ஒரு லட்சத்திற்கும் கீழ்..!

புத்தாண்டில் அதிக போதையா? தகவல் கொடுத்தால் வீட்டுக்கு அழைத்து செல்வோம்: காவல்துறை அறிவிப்பு..!

தெரு குழாயில் தண்ணீர் குடித்த 8 பேர் பலி.. 100 பேர் மருத்துவமனையில் அனுமதி.. என்ன நடந்தது?

கரூர் விவகாரம்.. சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன? நிர்மல்குமார் பேட்டி..!

உபெர் உதவியால் பிறந்த குழந்தைக்கு 10 வயது.. இணை நிறுவனர் டிராவிஸ் கலானிக் நெகிழ்ச்சி பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments