சரிவுடன் முடிந்த மும்பை சென்செக்ஸ்!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (17:08 IST)
இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 454 புள்ளிகள் சரிந்து 59,795 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. 

 
கடந்த திங்கட்கிழமை மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 1200க்கும் அதிகமான புள்ளிகள் இறங்கியதால் முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக வர்த்தக ஆரம்பத்தில் சென்செக்ஸ் இறங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து நேற்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 90 புள்ளிகள் அதிகரித்து 58,763 என்ற புள்ளியில் விற்பனையானது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 38 புள்ளிகள் உயர்ந்து 17540 என்ற புள்ளியில் விற்பனையானது. 
 
ஆனால் இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 454 புள்ளிகள் சரிந்து 59,795 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 14 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 121 புள்ளிகள் குறைந்து 17,536 புள்ளியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயின் காரை மறித்த நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சி!.. தவெகவில் அதிர்ச்சி...

விஜயால் 10 தொகுதி வேட்பாளர்கள் பேரை சொல்ல முடியுமா?!.. நயினார் நாகேந்திரன் நக்கல்!...

கஞ்சா விற்ற 21 வயது பெண் சாப்ட்வேர் பொறியாளர்.. காதலனுடம் உடந்தை.. கூண்டோடு கைது

5 ரூபாய்க்கு பருப்பு, சாதம், சப்பாத்தி, காய்கறியுடன் சாப்பாடு.. இன்று முதல் 100 இடங்களில் தொடக்கம்..!

எனக்கு ஓட்டு போட்டால் 1100 சதுர அடி நிலம், 5 நாட்கள் தாய்லாந்து சுற்றுப்பயணம்.. தங்க, வெள்ளி நகைகள்.. கூவி கூவி விற்கும் வேட்பாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments