சுவையான மொறுமொறுப்பான தட்டை செய்வது எப்படி...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
அரிசி மாவு - 200கிராம்
பொட்டுக்கடலை - 50கிராம்
கடலை பருப்பு - 2 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 2
வெண்ணெய் - 2டீஸ்பூன்
எள் - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10 இலைகள்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
 
அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு, வெண்ணெய், ஊற வைத்த கடலைப்பருப்பு இவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து பிசிறிக் கொள்ள வேண்டும். காய்ந்த மிளகாய், மிளகு,பெருங்காயம், கறிவேப்பிலை இவற்றை கரகரப்பாக அரைத்து மாவுடன் சேர்க்க வேண்டும். 
 
சிறிது, சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வாழையிலை அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் தட்டைகளாக தட்டி காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும். சுவையான மொறுமொறுப்பான தட்டை தயார். 
 
குறிப்பு: தட்டைக்கு மாவு பிசையும் போது, கைகளில் நன்றாக எண்ணெய் தேய்த்துக் கொண்டு வாழையிலையில் தட்டி எடுத்தால், கைகளில் ஒட்டாமல் வரும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

கண்களைப் பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பழக்கங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments