Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருந்து கடைகளில் பீர் விற்பனை செய்ய....: நடிகை ரோஜா சரமாரி கேள்வி!

மருந்து கடைகளில் பீர் விற்பனை செய்ய....: நடிகை ரோஜா சரமாரி கேள்வி!

மருந்து கடைகளில் பீர் விற்பனை செய்ய....: நடிகை ரோஜா சரமாரி கேள்வி!
, புதன், 5 ஜூலை 2017 (15:08 IST)
ஆந்திராவில் அம்மாநில கலால் துறை அமைச்சர் பேசிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா இது குறித்து சரமாறியாக கேள்வி எழுப்பியுள்ளார்.


 
 
ஆந்திர கலால் துறை அமைச்சர் கே.எஸ்.ஜவஹர் தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் பீர் ஆரோக்கிய பானம் இல்லை என யார் சொன்னது? அது ஆரோக்கிய பானம் தான் என்பதை நிரூபிக்க நான் தயாராக உள்ளேன் என கூறினார்.
 
மதுவுக்கு ஆதரவாக அமைச்சரின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ளார் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா.
 
பீர் ஆரோக்கியமான பானம் என்றால் அதை மருந்து கடைகளில் விற்பார்களா? அரசு மது விற்பனையை ஊக்குவித்து வருகிறது. மக்கள் மீது அக்கறை இல்லை. 85 பார்களுக்கு அனுமதி கொடுத்துள்ளனர். மாநிலை வருவாயை பெருக்க மது விற்பனைதான் ஒரே வழி என்று முடிவு செய்துவிட்டனர் என ரோஜா தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய ராணுவத்தை அழிக்கும் சக்தி எங்களுக்கு உண்டு; கூவும் சீன பத்திரிக்கை