Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமேதியில் ராகுல் தோற்றது எப்படி ? – பாஜகவின் 5 ஆண்டு திட்டம் !

Webdunia
வெள்ளி, 24 மே 2019 (10:35 IST)
மக்களவைத் தேர்தலில் தங்கள் குடும்பத்தின் ஆஸ்தான தொகுதியான் அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியடைந்திருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.

செனற 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போதும் இதே தொகுதியில் ராகுலை எதிர்த்து ஸ்மிருதி ரானிதான் வேட்பாளராக நிறுத்தப்பட்டு தோல்வியடைந்தார். ஆனால் தோல்வி அடைந்தாலும் அதேத் தொகுதியில் தங்கி அத்தொகுதிகளின் நிறை குறைகளைப் பற்றி நன்கு அறிந்து மக்களோடு உரையாடியுள்ளார்.

தெளிவாக சொல்லவேண்டுமென்றால் வெற்றி பெற்ற ராகுல் காந்தியை விட தோல்வி அடைந்த ஸ்மிருதி ரானி அந்த தொகுதிக்காக சிறப்பாக உழைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஸ்மிருதி ரானியின் இந்த பணி குறித்து பல முறை ராகுலிடம் சொல்லியபோதும் அவர் அதை பெரிதாகக் கண்டுகொல்லவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும்  தங்கள் தொகுதியில் ஒரு கிராமத்தைத் தத்தெடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி அமேதி தொகுதியிலுள்ள ஜெகதீஷ்பூர் கிராமத்தை ராகுல் காந்தி தத்தெடுத்தார். இந்த விழாவுக்காக அவர் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெகதீஷ்பூருக்கு வந்தார். அதன்பின் இந்தத் தேர்தல் சமயம் வரை அவர் தான் தத்தெடுத்த கிராமத்துக்கே வரவில்லை. ஆனால் அந்த கிராமத்த்துக்குக் கூட சென்று ஸ்மிருதி ராணி மக்களோடு உரையாடி இருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போதும் இவற்றை சொல்லியே வாக்குகளைப் பெற்றுள்ளா.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments