5 - 6 மணி நேரம் தாமதமாகும் தேர்தல் முடிவுகள்: காரணம் என்ன?

Webdunia
வியாழன், 23 மே 2019 (07:48 IST)
வழக்கத்தைவிட 5 - 6 மணி நேரம் தாமதமாகவே தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. 67.11% வாக்குகள் பதிவாகியுள்ளன. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. 
 
முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், இன்னும் சற்றும் நேரத்தில் வாக்கு எண்ணிக்கை துவங்கவுள்ளது. மின்னணு இயந்திரங்களின் வாக்குகள் முழுவது எண்ணப்பட்ட பிறகு இப்புகைசீட்டு இயந்திரமான விவிபேட் பதிவுச் சீட்டுகள் எண்ணப்படும். 
 
ஒரு தொகுதிக்கு 5 விவிப்பேட் இயந்திரங்கள் எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும். வழக்கமாக வாக்கு எண்ணிக்கை நாளில் மாலைக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகும். ஆனால், இந்த முறை 5 - 6 மணி நேரம் தாமதமாகவே தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments