Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்பு தோழமையுடன் இருந்தோம் இன்று எதிரியாக இருக்கிறோம்.! யாரைப் பற்றி சொல்கிறார் ஜெயக்குமார்.!!

Senthil Velan
சனி, 3 பிப்ரவரி 2024 (16:58 IST)
மக்களவைத் தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  
 
சென்னையில் செய்தியாளர்களிடம்  பேசிய அவர்,  அண்ணாவின் பெயரை சொல்வதற்கு திமுக-விற்கு எந்த தகுதியும் இல்லை என்றார். தேர்தல் நெருங்கக் கூடிய சூழலில் ஏற்கனவே அனைத்து பணிகளும் பொதுச் செயலாளர் தலைமையில் இளைஞர் அணி பாசனை பிரச்சாரக் குழு தேர்தல் அறிக்கை குழு உள்ளிட்ட அனைத்து குழுக்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றன என்றும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் இன்னும் தேர்தல் வர ஒரு மாதமே உள்ள சூழலில் விரைவில் கூட்டணி குறித்து அறிவித்து வெளியிடப்படும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
 
திமுகவைப் பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை
தொடங்கி இருப்பதற்கு காரணம் அந்த கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறிவிடும் என்ற பயம் தான் என்று அவர் விமர்சித்தார்.

பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்த ஜெயக்குமார்,  எங்களைப் பொறுத்தவரை முன்பு தோழமையுடன் இருந்தோம் இன்று எதிரியாக இருக்கிறோம் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டாரா? மத்திய அரசு விளக்கம்..!

மேப்ல பாகிஸ்தானே இல்லாம போயிடும்! எல்லையை பிடிக்க போர் நடத்தல! - அண்ணாமலை ஆவேசம்!

முதல்வர் ஸ்டாலினின் ‘ஒற்றுமை பேரணி’.. மெரினாவில் போக்குவரத்து மாற்றம்..!

இந்திய விமான தளங்களை குறி வைத்தார்கள்! பாகிஸ்தான் சதி அம்பலம்! - கர்னல் சோஃபியா குரேஷி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

அடுத்த கட்டுரையில்
Show comments