Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில் குண்டுவெடிப்பு..! பதற்றம் - போலீசார் விசாரணை!!!

Senthil Velan
சனி, 3 பிப்ரவரி 2024 (16:40 IST)
பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பாகிஸ்தானில் வருகிற எட்டாம் தேதி நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தானின் கராச்சி மாநகரில் உள்ள தேர்தல் ஆணையத்தின் கார் பார்க்கிங் பகுதியில் இன்று குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
வெடிகுண்டு மறைக்கப்பட்டிருந்த பை ஒன்றை மர்ம நபர்கள் மறைத்து வைத்துவிட்டு சென்றிருந்த நிலையில், துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர் ஒருவர், அந்த பையன் எடுத்து குப்பையில் வீசி உள்ளார். அப்போது அந்த வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

ALSO READ: மீண்டும் சோமாலியா கொள்ளையர்கள் அட்டகாசம்..! 19 பேரை மீட்ட இந்திய கடற்படை
 
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தேர்தல் ஆணைய அலுவலகத்தினுள் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருந்தால் பலத்தை சேதம் ஏற்பட்டிருக்க கூடும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வெடிகுண்டு வைத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments