Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு..!

Senthil Velan
வியாழன், 28 மார்ச் 2024 (12:14 IST)
மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும்  ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 1,749 பேர் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 
 
தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சேலம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ALSO READ: TNPSC குரூப் -1 தேர்வு தேதி அறிவிப்பு..! எப்போது தெரியுமா..?
 
செல்வகணபதிக்கு சேலம் மேற்கு மற்றும் வடக்கு தொகுதிகள் என இரண்டு இடத்தில் வாக்குரிமை இருப்பதாக அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து அவரது வேட்பு மனுவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள தேர்தல் அதிகாரிகள், அதிமுகவினர் அளித்த புகாருக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று செல்வகணபதிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments