Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணி கட்சிகளுடன் பாஜக நாளை ஆலோசனை..! தொகுதி உடன்பாடு இறுதி செய்ய முடிவு..!!

Senthil Velan
செவ்வாய், 19 மார்ச் 2024 (20:31 IST)
மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பாஜக நாளை ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் அடுத்த மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுகவில் கூட்டணி பேச்சு வார்த்தை இன்னும் நிறைவடையாமல் உள்ளது.

அதிமுகவில் பாமக இணையும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் திடீர் திருப்பமாக பாஜகவில் பாமக இணைந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ALSO READ: நாளை முதல் வேட்பு மனு தாக்கல்..! 5 பேருக்கு மட்டுமே அனுமதி..!
 
பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில் தேமுதிகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பாஜக நாளை ஆலோசனை நடத்துகிறது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments