Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிக்கிற வெயிலில் தாமரை கருகிவிடும் – இறுதிப் பிரச்சாரத்தில் கனிமொழி !

Webdunia
புதன், 17 ஏப்ரல் 2019 (09:38 IST)
நேற்று தூத்துக்குடியில் தனது இறுதிப் பிரச்சாரத்தை முடித்த கனிமொழி அடிக்கிற வெயிலில் தாமரை கருகிவிடும் எனக் கூறியுள்ளார்.

தூத்துக்குடி தொகுதியில் திமுக வின் மகளிரணி செயலாளர் கனிமொழி மற்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் இடையெக் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தூத்துக்குடி இந்த முறை ஸ்டார் அந்தஸ்து பெற்ற தொகுதியாக மாறியது.

பிரச்சாரம் நடைபெற்ற பொழுதெல்லாம் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று கடைசி நாள் பிரச்சாரத்தை தூத்துக்குடியில் கனிமொழி நிறைவு செய்தார். அப்போது பேசிய அவர் ‘மோடியின் ஆட்சியில் நாட்டில் பாதுகாப்பு இல்லை. மக்கள் புயலால் பாதிக்கப்பட்ட போது பிரதமர் இங்கு வரவில்லை. அவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. நான் வெற்றி பெற்றால் ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுப்பேன். சமூக வலைதளங்களில் கோபேக் மோடி என்பது வைரலாகி வருகிறது. மோடியை மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு மக்கள் வீட்டுக்குப் போக சொல்லுகிறார்கள்.  அவருடன் நாம் எடப்பாடியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தாமரை மலரும் என சொல்கிறார்கள். அடிக்கிற வெயிலில் தாமரை மலராது. பதிலாகக் கருகிவிடும். உச்சியில் நெருப்பாய் தகிக்கும் சூரியனைப் போல மக்களும் கோபமாக உள்ளனர். இந்த தேர்தலில் நாடும் நமதே, நாற்பதும் நமதே, தமிழ்நாடும் நமதே என மாற்றிக் காட்ட வேண்டும்’ எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments