Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் வாக்களித்த தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி !

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (09:10 IST)
தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தனது வாக்கை சென்னையில் செலுத்தினார்.

திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார். இதற்காக இத்தனை நாட்கள் தூத்துக்குடியில் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் அவருக்கான வாக்கு சென்னை மயிலாப்பூர் தொகுதியில் உள்ளதால் ஜனநாயக கடமையை செலுத்துவதற்காக சென்னை வந்த அவர் இன்று காலை புனித எப்பாஸ் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.

அதன்பின் வாக்காளர்களிடம் பேசிய அவர் ’திமுக கூட்டணி வேட்பாளர்கள் மிக சிறப்பான வெற்றியை பெறுவார்கள்.’ எனக் கூறினார்.

தமிழகத்தின் இன்னபிற அரசியல் ஆளுமைகளும் தத்தமது தொகுதிகளில் வாக்களித்து வருகின்றனர். இதுவரையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்துவருகிறது. சில தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயங்காததால் வாக்குப்பதிவு தொடங்க தாமதம் ஆனது.

 

தொடர்புடைய செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று முதல் 26ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு..!

இலங்கை சீதை கோயிலில் மகா கும்பாபிஷேகம்: இந்தியாவிலிருந்து சென்ற சீர்வரிசைகள்..!

ஜூன் 4ஆம் தேதிக்கு பின் ராகுல் காந்தி ஒரு யாத்திரைக்கு செல்வார்.. அமித்ஷா கிண்டல்..!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments