Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரச்சாரத்திற்கு அந்தமான் செல்லும் கமல்: யாருக்காக தெரியுமா?

Webdunia
திங்கள், 25 மார்ச் 2019 (19:17 IST)
மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது என முடிவு எடுத்துள்ளார். இதற்காக தங்கள் கட்சியின் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். 
 
ஆனால் கோவை, தென் சென்னை அல்லது ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் எதாவது ஒன்றில் போட்டியிடுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம், இந்திய குடியரசுக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில், இன்று மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியை கமல் சந்தித்தார். 
 
அந்த சந்திப்பிற்கு அவர் கூறியது பின்வருமாறு, வருகின்ற மக்களவை தோ்தலில் மக்கள் நீதி மய்யம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அந்தமானில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளா்களுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments