Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரச்சாரத்திற்கு அந்தமான் செல்லும் கமல்: யாருக்காக தெரியுமா?

Webdunia
திங்கள், 25 மார்ச் 2019 (19:17 IST)
மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது என முடிவு எடுத்துள்ளார். இதற்காக தங்கள் கட்சியின் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். 
 
ஆனால் கோவை, தென் சென்னை அல்லது ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் எதாவது ஒன்றில் போட்டியிடுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம், இந்திய குடியரசுக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில், இன்று மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியை கமல் சந்தித்தார். 
 
அந்த சந்திப்பிற்கு அவர் கூறியது பின்வருமாறு, வருகின்ற மக்களவை தோ்தலில் மக்கள் நீதி மய்யம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அந்தமானில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளா்களுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments