Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதவாக்கரை தேர்தல் அறிக்கை – திமுக குறித்து ஜெயக்குமார் கண்டனம் !

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (13:07 IST)
இன்று வெளியாகியுள்ள திமுக தேர்தல் அறிக்கை உதவாக்கரை அறிக்கை என்றும் அரைவேக்காட்டுத்தனமானது என்றும் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

திமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. பரவலாகப் பாராட்டு பெற்று வரும் அறிக்கையை அதிமுகவினர் சரமாரியாக விமர்சனம் செய்துவருகின்றனர். மேலும் சிலர் அதிமுக அறிக்கையை திமுக காப்பி அடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் திமுவின் தேர்தல் அறிக்கை உதவாக்கரையானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது ‘அதிமுக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.  ஆனால் திமுக அறிக்கை அரைவேக்காட்டுத்தனமாகவும் உதவாக்கரையாகவும் உள்ளது. நாங்கள் தமிழை ஆட்சிமொழியாக அறிவிப்போம் என அறிவித்தால் அவர்கள் தமிழை இணைமொழியாக அறிவிப்போம் என துரோகம் செய்கிறார்கள். அது என்ன ஆட்சி மொழி… திமுக - காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து ஒன்றரை லட்சம் பேரைக் கொன்ற உணர்வு குற்ற உணர்வாய் அவர்களைக் குத்துவதால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழர்களின் மீது உண்மையானப் பாசம் கொண்டவர்கள் அதிமுகவினர்தான். அவர்களுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் முறையான தண்டனைப் பெற்று தருவோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments