Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவிடம் விருப்பமனு கொடுத்த பிரமுகர் யார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (07:41 IST)
தீபாவின் கட்சி என்றவுடன் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது அவருடைய கார் டிரைவர் ராஜாதான். கணவர் மாதவனைவிட கட்சி விஷயத்தில் தீபா, டிரைவர் ராஜாவை அதிகம் நம்புவதாகவும், அவரிடம் தான் பல முக்கிய ஆலோசனைகள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் டிரைவர் ராஜாவை அவ்வபோது கட்சியில் இருந்து நீக்குவதும், பின் மீண்டும் சேர்ப்பதும் தீபாவின் வழக்கமாக இருந்து வருகிறது
 
இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனது கட்சி தனித்து போட்டி என்று அறிவித்த தீபா, அதற்கான விருப்பமனுக்களையும் பெற்று வருகிறார். முதல் நாளே சுமார் 100 பேர் விருப்பமனுக்களை பெற்று சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் விருப்பமனுவை பெற்ற டிரைவர் ராஜா, தனக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கும்படி தீபாவிடமும் அவரது கணவர் மாதவனிடமும் கேட்டுக்கொண்டுள்ளாராம். அதிலும் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதியில் போட்டியிட டிரைவர் ராஜா விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சென்னையில் தான் தீபாவும், அவரது கணவர் மாதவனும் போட்டியிட போகின்றார்களாம். சென்னையின் மூன்று தொகுதிகளும் தீபாவின் தேர்தல் பிரச்சாரத்தால் கலகலக்க போவது உறுதி என்றே அக்கட்சியின் தொண்டர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த தியாகி யார்? அதிமுக எம்.எல்.ஏக்களின் பேட்ஜ்.. என்ன அர்த்தம்?

2 ஆண்டுகளில் 7 மாநில சட்டமன்ற தேர்தல்: வக்பு சட்ட திருத்த மசோதா பாஜக.வுக்கு பாதகமா? சாதகமா?

இது நமக்கு கட்டுப்படியாகாது.. அமெரிக்க ஏற்றுமதியை நிறுத்திய லேண்ட் ரோவர்! - அடுத்து டாட்டா காட்டப்போகும் TATA!

இலங்கை சென்ற பிரதமர் மீனவர் பிரச்சனைக்கு எந்த தீர்வும் காணவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

வாணியம்பாடி பள்ளி காவலாளி ஓட ஓட குத்தி கொலை.. விடுமுறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments