Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயிக்கலைன்னா மாவட்ட செயலாளர் போஸ்ட் குளோஸ்: எடப்பாடியின் அதிரடி

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (07:30 IST)
தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான 39 தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாவட்ட செயலாளர் கூட்டத்தையும் கூட்டினார். இந்த கூட்டத்தில் அவர் கொஞ்சம் கறாராக பேசியதாக தெரிகிறது
 
ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு பலமான கூட்டணியை அமைத்துள்ளோம். வேட்பாளர்களையும் பாத்து பாத்து தேர்வு செய்துள்ளோம். அதேபோல் தேர்தல் செலவுக்கு தேவையான பணம் தேவையான நேரத்தில் சரியாக வந்து சேரும். இதையெல்லாம் வைத்து உங்கள் பகுதி வேட்பாளரை வெற்றி பெற செய்வது உங்கள் பொறுப்பு. வெற்றி பெறாத மாவட்ட செயலாளர்கள் நீக்கப்படுவார்கள். அப்புறம் என்மீது வருத்தம் கொள்ள கூடாது என்று மாவட்ட செயலாளர்கள் இடையே முதல்வர் கறாராக பேசினாராம்
 
மேலும் இந்த கூட்டத்தில் துணை முதல்வர் பேசியபோது, 'இன்னும் ஒருசிலர் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என்று மனதில் வைத்து கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. அதிமுக என்பது இனி ஒரே அணிதான். எல்லோரும் ஒற்றுமையாக பணிபுரிந்து கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்' என்று கூறினாராம்
 
இதனையடுத்து மாவட்ட செயலாளர்கள் சுறுசுறுப்பாகியுள்ளதாகவும், டைம்ஸ் நெள கருத்துக்கணிப்பை பொய்யாக்க வேண்டும் என்றும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments