Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரோ சாப்பிட ஊரே வரிசையில் – நடிகர் பார்த்திபன் கிண்டல் பதிவு !

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (09:34 IST)
நடிகர் பார்த்திபன் தனது வாக்கைப் பதிவு செய்ய வரிசையில் நிற்கும் வீடியோவை வெளியிட்டு தேர்தலையும் அரசியல்வாதிகளையும் கிண்டல் செய்துள்ளார்.

தமிழகத்தில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தத்தமது தொகுதிகளில் தங்கள் வாக்கைப்பதிவு செய்துவருகின்றனர். ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, கனிமொழி, கமல் ஆகியோர் காலையிலேயே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

திரைநட்சத்திரங்களான ரஜினி, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி ஆகியோரும் தத்தமது தொகுதிகளில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நடிகர் பார்த்திபன் டிவிட்டரில் தான் வாக்களிக்க வரிசையில் நிற்கும் வீடியோவை வெளியிட்டு ‘ யாரோ சாப்பிட ஊரே வரிசையில்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சையானக் கருத்துகளுக்காகப் புகழ்பெற்றவரான பார்த்திபன் தேர்தல் பற்றியும் அரசியல்வாதிகள் பற்றியும் தனது குறும்பான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments