Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜியோவின் புதிய சேவை அறிமுகம்!

Webdunia
வியாழன், 10 மே 2018 (21:16 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய போஸ்ட்பெய்ட் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு துறையில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி புரட்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை ஏர்டெல், வோடாபோன் உள்ளிட்ட பிற முன்னணி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்து கொள்ள போராடி வருகின்றனர்.
 
ஜியோவிற்கு போட்டியாக பல சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜியோ நிறுவனம் ஜியோபோஸ்ட்பெய்ட் என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.  
 
இதில் சர்வதேச அழைப்புகள் வெறும் 50 பைசாவில் இருந்து ஆரம்பமாகிறது. இந்த சேவை வரும் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த சேவையில் ரூ.199க்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 25ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த புதிய போஸ்ட்பெய்ட் சேவையில் சிறப்பம்சம் சர்வதேச அழைப்புகளுக்கு குறைந்த கட்டணம்தான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments