Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தான் அணி போராடி தோல்வி.....பஞ்சாப் அணி சூப்பர் வெற்றி

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (23:49 IST)
ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி போராடி தோற்றது. பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

14வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட்  விழா நடைபெற்றுவருகிறது. இன்று ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் விளையாடியது.

இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தனர்.

இந்த இமாலய ரன்கள் அடித்த பஞ்சா அணி கேப்டன் ராகுல் பங்கு முக்கியமானது.அவர் 50 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார். கெயில் 40 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் தரப்பில் சர்காரியா 3 விக்கெடுகள் மாரிஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணியினர் கடினமாக இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கினர். முதலியே விக்கெட் சரிந்தாலும்,   7 விக்கெட்டுகள் இழந்து 217 ரன்கள் எடுத்தது தோல்வியைத் தழுவியது. ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் 119 ரன்கள் எடுத்தார்.

பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments